தேசிய விருது பெற்ற பாடல் - வைரமுத்து
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லோடச்சி வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே
காடைக்கும் காட்டு குருவிக்கும்
எந்த புதரிலும் இடமுண்டு ...
கோடைக்கும் ஆடிக்கும் குளிருக்கும்
தாய் ஒதுங்கதான் இடமுண்டா ..... .
கரட்டு மேட்டையே மாத்துனா
அவ கள்ளபுளிஞ்சி கஞ்சி ஊத்துனா
கரட்டு மேட்டையே மாத்துனா
அவ கள்ளபுளிஞ்சி கஞ்சி ஊத்துனா .
.கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லோடச்சி வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே
ஒலவு காடுல வெத வெதப்பா
ஒனாகரடுல கூழ் குடிப்பா
அவாரங் -குலையில கை துடைப்பா
பாவமப்பா .....
வெளி முள்ளில் அவ வெறகு எடுப்பா
நாழி அரிசி வச்சு ஓலையரிப்பா
புள்ள உண்ட மிச்சம் உண்டு உசுர் வளர்ப்பா
தியாகமப்பா ...
கிழக்கு விடியும் முன்ன முழிகிரா
அவ உழைக்க பிடிச்சுதான் தெரகுறா
மண்ண கிண்டித்தான் பொழைக்கிறா
உடல் மக்கிபோக மட்டும் உழைக்கிறா
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லோடச்சி வளர்த்த நீயே
தங்கம் தனி தங்கம் மாசு -இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம் போல பாசமில்ல .
நேசமில்ல ...
தாய் கையில் என்ன மந்திரமா
கேப்பகளியில் ஒரு நெய் -ஒழுகும்
காஞ்ச கருவாடு தேன்-ஒழுகும்
அவ சமைகையில
சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குது
தாய் ரெண்டு தாய் இருக்குதா ..
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லோடச்சி வளர்த்த நீயே ..
No comments:
Post a Comment